இந்தியாவுல இப்போ எங்க பார்த்தாலும் தீவிரவாதத்தையும், பாகிஸ்தானையும் பற்றி தான் பேச்சு... அது போல் பாகிஸ்தானியர்கள் அவர்களுக்குள் இந்தியாவை பற்றி என்ன பேசிக்கொள்வார்கள் என்று ஒரு கற்பனை....

------------------------

"டேய்... நம்ம அரசாங்கம் அமெரிக்காவுல இருந்து 5000 செப்டிக் டாங்க் (septic tank) வாங்குராங்கலாமே.... தெரியுமா ??"

"அப்படியா.... ங்கொய்யால....அது வந்து எறங்குனதும், இந்தியா மேல படை எடுத்துற வேண்டியது தான்..."


---------------------

"இந்தியாவுல எந்த நம்பிக்கைல ப. சிதம்பரத்தை உள்துறை அமைச்சரா ஆக்கிருக்காங்க ? "

"ஷேர் மார்க்கட்ட அடிச்சி காலி பண்ணுன மாதிரி தீவிரவாதத்தையும் காலி பன்னுவாருங்கர நம்பிக்கைல தான்...."

------------------------

"இந்தியாகாரனுங்க நமக்கு முன்னாடி நிலாவுக்கு ராக்கெட் விட்டுட்டானுங்களே..."

"அதுக்கு தான் நம்ம அரசாங்கம் சூரியனுக்கு ராக்கெட் விடப்போறம்னு சொல்லிருக்காங்களே..."

"சூரியனுக்கு ராக்கெட்டா ? எரிஞ்சிறாது?"

"நம்ம ராத்திரியில விடுவோம்ல!"

--------------------------

பாகிஸ்தான் ISI அலுவலகத்தில்....

"யோவ்... இந்தியகாரணுங்க இம்சை தாங்க முடியலை... ரெண்டு வெள்ளை பேப்பர் கொடு... காட்டமா ஒரு லெட்டர் எழுதுறேன்...."

"சார்.. ஒரு வெள்ளை பேப்பர் தான் இருக்கு"

"அத ஒரு xerox போட்டு ரெண்டா கொடு... இத கூட நான் சொல்லனுமா"

"????????????"

----------------------------



5 கும்மிகள்:

முடியலை....ஷ்....அப்பா.....இப்பவே கண்ணைக் கட்டுதே....

"ஷேர் மார்க்கட்ட அடிச்சி காலி பண்ணுன மாதிரி தீவிரவாதத்தையும் காலி பன்னுவாருங்கர நம்பிக்கைல தான்...."

"சூரியனுக்கு ராக்கெட்டா ? எரிஞ்சிறாது?"
"நம்ம ராத்திரியில விடுவோம்ல!"


"சார்.. ஒரு வெள்ளை பேப்பர் தான் இருக்கு"
"அத ஒரு xerox போட்டு ரெண்டா கொடு... இத கூட நான் சொல்லனுமா"
________________________________________________
நன்று

பட்டய கிளப்பிருங்கீங்க..

ம்...அடிச்சி ஆடுங்க

எல்லாம் நல்லா இருந்துச்சு....

:)

SUPER YA .GOOD KEEP IT UPPU

super pattya kilappuranga

Post a Comment