அவர்கள் இருவருக்கும் 10 நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.. இன்று போனில்.....

அவள்: என்ன பண்றிங்க?

அவன்: சும்மா தான் இருக்கேன்

அவள்: அது தான் தெரியுமே.. ஆபிசுல நீங்க என்னைக்கு வேல பாத்துறிக்கிங்க.

அவன்: இதுல்லாம் ரொம்ப ஓவர்டி

அவள்: உங்க friends எல்லாம் சொல்றாங்க "அண்ணனுக்கு சம்பளம் கொடுக்குறது ஆணியே புடுங்காம இருக்க தான்னு"

அவன்: ஆமா நீ சமையல் செஞ்சு பழகிட்டியா ?

அவள்: அதெல்லாம் அங்க வந்து கத்துக்கறலாம் ....

அவன்: அந்த விசப்பரிட்சையே வேணாம்.. ஒழுங்கா அங்கேயே கத்துக்கோ..

அவள்: இதுல்ல என்ன விசப்பரிட்சை இருக்கு ?

அவன்: ஆமா எப்படி சமைக்குறதுங்கர பரீட்சை உனக்கு... நீ சமைச்ச சாப்பாடு அதாவது விஷம் எனக்கு...

அவள்: @#$@# உங்களுக்கு போயி போன் பண்ணினேனே என்னைய சொல்லணும்.. டொக்....



விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும் ... just for fun



இமெயிலில் அனுப்பிய தம்பி மகேஸ்வரனுக்கு நன்றி...



போனில் L.K.G பையன்: என் பையனுக்கு காய்ச்சல் அதுனால இன்னைக்கு ஸ்கூலுக்கு வர மாட்டான்

டீச்சர்: சரி, நீங்க யாரு பேசுறது?

L.K.G பையன்: எங்க அப்பா

டீச்சர்:!!!!!!

-------------------------------------------------------------------------

L.K.G பையன் 1: மச்சி, தம் அடிச்சா கேன்சர் வரும்னு டீச்சர் சொல்றாங்கடா
L.K.G பையன் 2: டீச்சர் ஏப்ரல் பூல் பண்றாங்க மாப்ள.. தம் அடிச்சா புகை தான் வரும்

----------------------------------------------------------------------------

L.K.G பையன் 1: இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்?
L.K.G பையன் 2: இட்லி கூட்டமா வரும், தோசை singleலா வரும் .

----------------------------------------------------------------------------

L.K.G பையன் 1: மாப்ள எங்க அப்பா பயந்தான்கோழியா இருக்காருடா .
L.K.G பையன் 2: எப்படிடா சொல்லுற ?
L.K.G பையன் 1: எப்ப ரோடு cross பண்ணுனாலும் என் கைய இருக்கமா பிடிச்சிருக்கிறார்

-----------------------------------------------------------------------------





நாங்க திரும்பி வந்துட்டோம்ல... அலப்பறை தொடரும்...



நேற்று நடந்த இரு நிகழ்வுகள் தான் இன்றைய பதிவு....

பதிவ படிச்சமா, ஒரு பின்னோட்டம் போட்டமானு இல்லாம..... இப்ப புதுசா ஒரு வழி கண்டுபிடிச்சிருக்காய்ங்க... அதாவது குறுஞ்செய்தி அனுப்புறது... என்னோட முந்தய பதிவ படிச்ச நண்பன் அனுப்புன குறுஞ்செய்தி "அந்த 15 பொண்ணுங்க பேரு, விலாசத்த சொஞ்சம் அனுப்பவும்".


இவன் எதுக்கு இதக்கேக்குரான்னு யோசிச்சா, அப்பத்தான் தெரியுது நம்மாளு அந்த பொண்ணுங்கள கரெக்ட் பண்ண பாக்குறது. நான் கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்டு போன் அடிச்சேன்.

"சொல்றா... S.M.S படிச்சியா?"

"ம்ம்.. படிச்சேன்... அவளுங்களுக்கு எல்லாம் கல்யாணம் அயிரிச்சுனு எழுதிருக்கேன் பார்க்கலையா?"

"அதுனால என்ன... எனக்கும் தான் கல்யாணம் ஆயிருச்சி"

"@#%$&"

அட கெரகம் பிடிச்சவய்ங்கலா.... உங்கள மாதிரி ஆளுக இருக்குறதுனால தான் அப்ப...அப்ப மழை பெய்யுது, ஆல் டைம் வெயில் அடிக்குது . உங்களையெல்லாம் அந்த திருநகர் மாமி சாரி சாமி தான் காப்பாத்தனும்

-------------------------------------

நம்ம பய ஒருத்தண் கிட்ட இருந்து மிஸ்ஸுடு கால்....

"என்னடா! கால் பண்ணுனியா?"

"அமாண்டா! ஒரு நம்பர் தர்றேன் எழுதிக்கோ"

"சொல்லு"

"001040203030403"

(நான் மனதுக்குள்)ஆஹா! நண்பன் ஏதோ வெளிநாட்டு நம்பர் கொடுக்குறான் . கண்டிப்பா எதாவது அமெரிக்கா பொண்ணு நம்பரா தான் இருக்கும். இத கரெக்ட் பண்ணி அமெரிக்கா போயி ஹவுஸ் husbanda இருந்துற வேண்டியது தான். லேட்டா வந்தா வசவு, சீக்கிரம் போனா வசவு, பேப்பர தொலைச்சா வசவு.... ச்சே..ச்சே.. எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்... அமெரிக்க போயி சேலைய தொவச்சி போட்டமா, சமையல் பன்னுனோமானு, கைக்கு அடக்கமான புருசன இருந்துறலாம்"

"டேய் வெண்ணை! என்ன தூங்கிட்டியா?"

"இது யாரு நம்பர்டா?"

"என்னோட I.C.I.C.I நம்பரு.... இப்ப உடனே ஒரு ரெண்டாயிரம் ரூபா போட்டு விடு... மறந்துறாத... சரியா... வச்சிர்றேன்..."

என்னடா இப்பிடி கெலம்பிட்டிங்க... கடன் கேக்குரது கூட மிஸ்ஸுடு கால் குடுத்தா கேக்குறது... இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா



இது முக்கியமா இந்த forwarded மெயில் அனுப்புற மக்களுக்காக. இதுக்குமேல என்னால தாங்க முடியாது... போதும்டா... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்.

கணக்கு வழக்கு பாக்குறதுக்கு கண்டுபுடிச்ச கம்ப்யூட்டர ஜோசியம் பாக்க வச்சது நம்மாளுங்க தான். அதனால இந்த forwarded மெயில் மேட்டரும் நம்மாளுங்க கண்டுபிடிச்சதா தான் இருக்கும்.

நீங்க பண்ணுன அட்டுழியம் கொஞ்சமா நஜ்ஜமா.

மொதல்ல, சினிமா தியேட்டர்ல சீட்டுல எய்ட்ஸ் ஊசி வைக்கிராய்ங்கனு சொன்னிங்க. அதுல இருந்து தியேட்டர் பக்கமே போகலை.

அப்புறம் பெப்சி, கோக-கோலா எல்லாம் கக்கூஸ் கழுவத்தான் லாயக்குன்னு சொன்னிங்க. அதோட சரி. அதையும் விட்டாச்சு.

அப்புறம் vicks action 500ஐ தடை பண்ணிட்டாங்கனு சொன்னிங்க... மருந்து கடைக்காரன் கிட்ட அடி வாங்காதது தான் மிச்சம்.

அதோட இந்த மெயில்ல microsoftக்கு அனுப்புனா லேப்டாப்பு , அந்த மெயில்ல நோக்கியாவுக்கு அனுப்புனா செல்போன்னுணு,என்ன நேக்கா கத சொன்னிங்கடா... லேப்டாப்பும் வரலை, செல்போனும் வரல.

அப்புறம், இந்த விநாயகர், சாய்பாபா படத்தையெல்லாம் அனுப்பி, இத 10 பேருக்கு அனுப்புனா... நீங்க ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்னு சொன்னிங்க... ஆனா நான் ஆசப்பட்ட 15ஜும் வேற எவன், எவனையோ கட்டிக்குட்டு இப்ப இந்திய பூர பரவிக்கெடக்குதுங்க.... (ஒன்னும் சிக்கலை )

அதோட விடுராய்ங்கலாணா....அது தான் இல்லை.... நேத்து ஒரு மெயில் வருது... இத உடனே 10 பேருக்கு அனுப்பலைனா... நீ செத்துப்போயிருவேன்னு...... (நமக்கு பயம்லா ஒன்னும் இல்லை.... அட இருந்தாலும் உசுர் விசயத்துல சூதானமா இருக்கனும்ல).

ஆபிசுல வேல வெட்டி இல்லேன்னா... பேசாம எங்கள மாதிரி தமிழ்மணம், தமிளிஷ்ணு பொழுத போக்க வேண்டியதுதான... உங்களுக்கு மட்டும் ஏன் மூளை இப்படி வேல செய்யுது...

போதும்டா... இதுக்குமேல என்னால தாங்க முடியாது... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். இனிமேல் நானும் உங்களுக்கு forward பண்ணல, நீங்களும் எனக்கு forward பண்ணாதிங்க...



அலுவலகத்தில் சில/பல காரணங்களுக்காக பல வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதுண்டு. (எங்க அலுவலகத்தில் தமிழிஷ் தடைசெய்யப்பட்டுள்ளது). அவ்வாறான வலைத்தளங்களை பார்ப்பது எப்படி?. மிகவும் எளிது

இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.com







இங்கு நீங்கள் பார்க்கவேண்டிய வலைதள முகவரியை டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் வலைத்தளம் உங்கள் கையில்.






நாங்களும் விகடன்.காம்ல வந்துட்டோம்ல... அதுவும் போட்டாவோட.. முதல் பக்கத்துலயும் இருக்கோம்...


http://www.vikatan.com
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/kaganeshstory200609.asp


விகடனுக்கு மனமார்ந்த நன்றி... தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல் ஒட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


அட விகடன், குங்குமம் இப்பிடி எதுலயாவது நம்ம பதிவு வந்தா, இந்த மாதிரி ஒரு பதிவு போடணுமாம். இல்லேன்னா சாமிகுத்தம் ஆயிருமாம், மித்தபடி இந்த விளம்பரமெல்லாம் நமக்கு பிடிக்காது...








ஆஸ்திரேலியா போகுற நம்ம மக்களுக்கு, இந்திய அரசு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது, அதே போல் இந்தியா வரும் வெளிநாட்டவருக்காக நாங்கள் சில குறிப்புக்களை வெளியிடுகிறோம்.

எப்படி வருவது:

இந்தியாவுக்குள் வருவதற்கு 3 வழிகள் உள்ளன.

முதலாவது: ஏர்-இந்தியா விமானம் முலமாக டெல்லி, மும்பை, சென்னை அல்லது கொல்கத்தாவுக்கு வருவது. முக்கால் வாசி பேரு இப்படி தான் வர்ராய்ங்க. இங்க வந்து இறங்குனதுக்கு அப்புறம் ரயிலோ, பேருந்தோ புடிச்சு அவனுங்க ஊருக்கு போவானுங்க.


எல்லாரும் இறங்கி வேற எங்காவது போவாய்ங்கனா, அப்புறம் விமான நிலையத்த எதுக்கு இந்த ஊர்ல வச்சிருக்கிங்கன்னு உங்களுக்கு தோணும், அப்படி தோணுனா, மூடிக்கிட்டு பேசாம இருக்கணும். எங்க ஊருல நாங்க எங்க வேணா விமான நிலையம் கட்டுவோம்டா அத கேக்க நீ யாருடா என் வென்று.


வந்தோமா, ஊற சுத்தி பார்த்தோமா, காச செலவு செஞ்சமானு இருக்கணும், அத விட்டுட்டு இந்த மாதிரி கேள்விலாம் கேட்டா அடிச்சி பல்ல பேத்துருவோம்.

இரண்டாவது:

இது "ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரின்னு" சொல்ற மக்களுக்காக. அதாவது பாகிஸ்தானில் இறங்கி அங்கிருந்து காஷ்மீர்ருக்குள் நுழைந்து , அதன் மூலம் இந்தியாவுக்குள் வருவது. இதுல A.K-47 துப்பாக்கி மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தையும் பாகிஸ்தான் அரசாங்கம் கவனித்துக்கொள்ளும். ஆனால் ஒரே பிரச்சனை உங்கள் உயிருக்கு எங்களால் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

மூன்றாவது:

பங்களாதேஷ்ல் இறங்கி அங்கிருந்து எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் வருவது. பங்களாதேஷ் அரசாங்கம் இதை இலவச சேவையாக செய்தாலும் அங்கிருக்கும் சிலர் உங்கள் பணத்தை அபகரிக்கும் ஆபத்து அதிகம்.

ஏர் - இந்திய விமானத்தில் எப்படி நடந்து கொள்வது :


நீங்கள் விமானத்தில் ஏறியவுடன் ஒரு வயதான பெண்மணி "ஏர் - இந்தியா உங்களை வரவேற்கிறது" என்று கூறுவார். உடனே "ஐயோ பூச்சாண்டி!, பூச்சாண்டி!" என்று கூச்சல் போடுதல் கூடாது. அவர் விமான பணிப்பெண். உங்களுக்கு உதவுவதற்க்காக இருந்தாலும், பல நேரங்களில் நீங்கள் தான் அவர்களுக்கு உதவும் படி இருக்கும். (மாத்திரை, மருந்து எடுத்து கொடுக்குறது போன்றவை)



இந்தியாவின் உணவுப்பழக்கங்கள், வாழ்கை முறை மற்றும் பல அடுத்த பதிவில்...


இன்டர்நெட்டில் படித்த ஒரு வெளிநாட்டு கட்டுரையின் பாதிப்பில் எழுதப்பட்டது.



"நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்... நீங்க எப்படி?"

"ஹி.. ஹி.. நானும் தான்... நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்"

"!!!!!"

------------------------------------------


"என்ன சார் வேணும்?"

"நம்ம நாட்டு தேசிய கொடி ஒன்னு குடுப்பா"

"இது எப்படி சார் இருக்கு?"

"வேற காட்டுப்பா"

"சார் இது?"

"இல்லை.. வேற காட்டு"

"இது சார்"

"யோவ்! வேற கலர்ல காட்டுயா ... ஒரே கலரையே திரும்ப திரும்ப காட்டிக்கிட்டு"

"!!!!!!"

------------------------------------------

"ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா "

"என்ன சார்! கோழிப்பண்ணை வைக்க போறேன்னு, போன வாரம் நூறு கோழி குஞ்சு வங்கிட்டுப்போனிங்க... என்ன ஆச்சு?"

"ஒன்னும் வளரலப்பா..."

"சரி சார்! இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வரணும்"

"வருவோம்ல... போன தடவ என்ன தப்புன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல"

"போன தடவ என்ன சார் தப்பு?"

"ரொம்ப ஆழமா நட்டுட்டேன்"

"!!!!!!"

------------------------------------------------------------------------------



"டேய்.. வாடா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?"

"ஆபீஸ்ல ஆணி நிறைய...இத புடுங்கு... அத புடுங்குனு ஒரே இம்சை... அப்புறம் வேற என்ன விசேசம்"

"உனக்கு தெரியுமா நம்ம ராஞ்சிகாரன் புதுசா ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருக்கான்"

"நல்ல விஷயம் தான... முகவரி சொல்லு"

"http://sellursingam.blogspot.com"

"ஆமா.. அவன் பழைய வலைப்பூ என்னாச்சு"

"அட அது பெரிய கதை... இவன் என்னத்தயாச்சும் வலைப்பூவுல போட்டுட்டு, எல்லாத்துக்கும் போன் அடிச்சு அத பார்த்தியா, இத பார்த்தியானு உயிரை வாங்கிருக்கான்"

"சரி"

"அத பொறுக்க முடியாம நம்ம பயலுவ ஒரு 4-5 பேரு சேர்ந்து அந்த வலைப்பூவுக்கு செய்வினை வச்சிட்டானுங்க"

" யாரு அந்த 4-5 புண்ணியவானுங்க ? "

"அவன் ராஞ்சியில ஒரு சாமியார்கிட்ட மய்யி வச்சி பார்த்ததுல இந்த சிறகுகள் குரூப் பயலுவ மேல தான் சந்தேகமாம்"

"அந்த குரூப்ல தான் இவன் உருத்து பயலுக ரெண்டு மூணு பேரு இருக்காய்ங்களே.. அவிய்ங்க இருந்துமா இப்படி நடந்துச்சு?"

"அட அவனுங்க தான் வசூல் பண்ணி எல்லாம் செஞ்சிறுக்கானுங்க..."

"அடப்பாவமே... அந்த கோவத்துல தான் யாரு போன் அடிச்சாலும் எடுக்கமாட்டேன்குறானா??"

------------------------



மணிக்கட்டை காட்டியபடி நண்பன்: மச்சி, மணி என்னடா ?

"அதுக்கு ஏன் கையா அங்க காட்டுற... எங்களுக்கு தெரியும்டா மணி எங்க பார்த்து சொல்லனும்னு... ஆமா பாத்ரூம் எங்க இருக்குன்னு கேக்குறதுக்கு நீ
இப்பிடி தான் கைய பின்னாடி காட்டி கேப்பியா?"


ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....

-------------------------------------------------------------

"என்னடா! திடிர்னு உன்னைய ஆல காணோம்... எங்க போன?"

(பெருமையாக) "PISS அடிக்க போனோம்"

"முண்ட... பானிபட் போருக்கு போன மாதிரி பெருமையா சொல்ற... இதெல்லாம் கொஞ்சம் கூச்சத்தோட சொல்லனும்டா..."


ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....

-------------------------------------------------------------

"என்ன சார்! படத்துக்கா ?"

"அட நாதாரி நாயே... தியேட்டருக்கு என்ன சேவிங் பண்ணவா வருவாய்ங்க?"

ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....

-------------------------------------------------------------



மெத்த படித்த மேதாவிகளே... வலையுலகின் சிங்கங்களே.... கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க பார்போம்....


1. Jawaharlal Nehru was the _______ of Indira Gandhi’s Father. ?

2. Make a grammatically correct sentence by using the verb "IS" immediately after the word "I"

3. I am having two coins of Indian currency in my pocket, the total value of which comes to 75 paisa. But mind you, one of the coins is not a fifty paisa coin. How it is possible?

4. What is taken from you before it is given to you?

5. Eventhough it belongs to you, usually others use it, What?


























1. இந்த sales repலாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க....???

2. எல்லா டிவி சாணல்லயும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்டுறுக்காங்க ? (பெரிய கொடுமை என்னனா... ஆபிசில எங்க bossஅ பர்த்தா எனக்கு ரோபோ சங்கர் நெனப்பு வந்து சிரிச்சிர்றேன்...)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்கிலிருந்தும் வாயில்லிருந்தும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? (அத உடனே எல்லாரும் ஏன் செஞ்சு பார்க்குறாங்க?)

5. flightlaயோ இல்லை நம்ம ரேஞ்சுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா ?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே ?? )

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே... பரிசுனாலே அது இலவசம் தாணே.... இல்லயா??

9. Numberஐ ஏன் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை

11. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே... அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்ராங்களே... நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்... இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிரியதாக இருப்பவர்களை விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???



இந்தியாவுல இப்போ எங்க பார்த்தாலும் தீவிரவாதத்தையும், பாகிஸ்தானையும் பற்றி தான் பேச்சு... அது போல் பாகிஸ்தானியர்கள் அவர்களுக்குள் இந்தியாவை பற்றி என்ன பேசிக்கொள்வார்கள் என்று ஒரு கற்பனை....

------------------------

"டேய்... நம்ம அரசாங்கம் அமெரிக்காவுல இருந்து 5000 செப்டிக் டாங்க் (septic tank) வாங்குராங்கலாமே.... தெரியுமா ??"

"அப்படியா.... ங்கொய்யால....அது வந்து எறங்குனதும், இந்தியா மேல படை எடுத்துற வேண்டியது தான்..."


---------------------

"இந்தியாவுல எந்த நம்பிக்கைல ப. சிதம்பரத்தை உள்துறை அமைச்சரா ஆக்கிருக்காங்க ? "

"ஷேர் மார்க்கட்ட அடிச்சி காலி பண்ணுன மாதிரி தீவிரவாதத்தையும் காலி பன்னுவாருங்கர நம்பிக்கைல தான்...."

------------------------

"இந்தியாகாரனுங்க நமக்கு முன்னாடி நிலாவுக்கு ராக்கெட் விட்டுட்டானுங்களே..."

"அதுக்கு தான் நம்ம அரசாங்கம் சூரியனுக்கு ராக்கெட் விடப்போறம்னு சொல்லிருக்காங்களே..."

"சூரியனுக்கு ராக்கெட்டா ? எரிஞ்சிறாது?"

"நம்ம ராத்திரியில விடுவோம்ல!"

--------------------------

பாகிஸ்தான் ISI அலுவலகத்தில்....

"யோவ்... இந்தியகாரணுங்க இம்சை தாங்க முடியலை... ரெண்டு வெள்ளை பேப்பர் கொடு... காட்டமா ஒரு லெட்டர் எழுதுறேன்...."

"சார்.. ஒரு வெள்ளை பேப்பர் தான் இருக்கு"

"அத ஒரு xerox போட்டு ரெண்டா கொடு... இத கூட நான் சொல்லனுமா"

"????????????"

----------------------------



2 நாளைக்கு முன்னாடி ஒரு பதிவ பார்த்தேன் "கூடுதுறை: சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா? அதில் எதுவும் ஆபத்து (ரேடியேசன் ) உண்டா என்று ? "


சரி.... நம்ம பங்குக்கு நாம விசாரிச்சு பார்ப்போம்...பதிவருக்கு நாம உதவி செஞ்சமாதிரியும் இருக்கும்... அட நல்லா இருந்தா நாம ஒன்னு வாங்கிக்கிரலாமேனு நெனச்சு நம்ம பசங்ககிட்ட (அட ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஜூனியர் பசங்கங்க ) "டேய் யாராவது இந்த சைனா மொபைல் போன் வச்சிருக்கானுங்கலானு பார்க்க" சொன்னேன்.

நம்ம பசங்க போயி ஒருத்தன (லோக்கல் ஜார்க்கண்டுகாரன்) இழுத்துட்டு வந்தானுங்க. அவன் ஆளு ஒருமாதிரி கோக்குமாக்கா - அரை மெண்டல் மாதிரி தான் இருந்தான். நான் அப்பவே சுதாரிச்சிருக்கணும், விதி யாரை விட்டுச்சி.

"டேய் நீ சைனா மொபைல் வச்சிருக்கியா ?"

"ஏன் உங்களுக்கு வேணுமா?"

"மொன்ன நாயே!... என்ன பார்த்தா என்ன 2000 ரூபாய் மொபைல second handல வாங்கிறவன் மாதிரியா தெரியுது ?? கேக்குறதுக்கு பதில் சொல்ரா ...."


"சரி சொல்லுங்க"

" நம்ம நண்பர் ஒருத்தர் இந்த மாதிரி ஒரு போன் வாங்கனும்னு பாக்குறார்...ஆனா இதுல நெறைய பிரச்சனை வரும்னு சொல்ராங்களே... இந்த ரேடியேசன், ஹியரிங் ப்ரோப்லேம் இந்த மாதிரி ?? "

"ரேஷன் பத்தி தெரியலை சார்... ஆனா இயரிங் ப்ரோப்லேமலா வராது ... அப்பிடியே வந்தாலும் அதை சரி பண்ணிரலாம் "

"இப்படி ஆல தான் நான் தேடிகிட்டிருந்தேன்.... எப்படி சரி பண்ணலாம் சொல்லு??

"போன காத விட்டு கொஞ்சதூரம் தள்ளி வச்சி பேசலாம்... இல்லினா லேசா என்னை ஊத்தின சரியா போயிரும்"

"என்னடா சொல்ற... என்னை உத்தனுமா?... "( இவன் MBBS படிக்காத டாக்டரா இருப்பான் போல.. பேச்சு கொடு.. பேச்சு கொடு.. என்றது என் மனச்சாட்சி). அதை நம்ம்ம்பி தொடர்ந்தேன்.

"சரி... என்னைய எங்க ஊத்தணும்... காதுலயா இல்லை போன்la யா ??"

"போன்ல ஊத்தின போன் ரிப்பேர் ஆயிரும்... காதுல தான் ஊத்தணும் "

"ஒ... அப்போ காதுல என்னை ஊத்துனா பிரச்சனை இல்லை?"

" ஆமா சார்.. அப்படியே பிரச்சனை வந்தாலும் இயரிங்க கழட்டி வச்சிடா பிரச்சனை இல்லை"

இயரிங்க கழட்டி வைக்கணுமா... என்ன எழவுடா சொல்றான் இவன் என்று அருகில் இருந்த விவரமான பசங்ககிட்ட கேட்டால் அப்போ தான் தெரியுது அந்த நாயி இவ்வளவு நேரம் சொன்னது hearing பத்தி அல்ல ear-ring( அதாவது கம்மல்) பத்தி என்று.

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... இப்போவே கண்ண கட்டுதே...

பேசாம நாமளும் எல்லாரையும் போல "சைனா பொண்ணுங்களுக்கு ஏன் மூக்கு சப்பையா இருக்குனு" கும்மி அடிச்சிட்டு போயிருக்கலாம் . இன்னைக்கு பொழப்பு வெளங்குன மாதிரி தான்...

நல்லா இருங்கடா டேய்.. நல்லா இருங்க.....